திருச்செந்தூர் பகுதி குளங்களுக்கு நீர் நிரப்ப பா.ஜ.க. கோரிக்கை

திருச்செந்தூர் பகுதி குளங்களுக்கு நீர் நிரப்பிட  ஸ்ரீவைகுண்டம் தென்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென பா.ஜ.க. சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் பகுதி குளங்களுக்கு நீர் நிரப்பிட  ஸ்ரீவைகுண்டம் தென்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென பா.ஜ.க. சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
  இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.செந்தில்வேல் அளித்த  மனு : தற்போது பெய்துள்ள வடகிழக்குப் பருவமழையினால் அணைகளில் தண்ணீர் அதிகளவில் உள்ளது. மேலும் ஸ்ரீவைகுண்டம் நீர்தேக்கத்தில் நீர் நிரம்பி அங்கிருந்து வீணாக கடலில் கலக்கிறது.
அந்த நீரினை ஸ்ரீவைகுண்டம் தென்கால் பாசனக்குளங்களுக்கு திறந்து விட்டால் திருச்செந்தூர் சுற்று வட்டாரப்பகுதி குளங்கள் நிரம்பி விவசாயம், குடிநீர் ஆதாரம் மற்றும் நிலத்தடி நீர் மட்டரும் உயரும். எனவே அரசு தக்க நடவடிக்கை எடுத்து உடனடியாக நீரினை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com