திருச்செந்தூர் அருகே விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஆறுமுகனேரி காமராஜ்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி (54). கடந்த 5-ஆம் தேதி இவர் தனது மனைவி சித்ராவுடன் (45) இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூரில் உள்ள உறவினர் வீட்டக்கு வந்து விட்டு, ஊர் திரும்பினர். அப்போது, திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினத்தில் இவர்களுக்கு பின்னால் வந்த கார் இருசக்கர வாகனத்தில் மோதியதில் ஜெயக்கொடிக்கு பலத்த காயமடைந்தார். இதையடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு இறந்தார். இது குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.