குலசேகரன்பட்டினத்தில் சரஸ்வதி நாமஜெப வேள்வி

பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் மதிப்பெண்கள் பெற வேண்டி,  பாரத திருமுருகன்  திருச்சபை, தர்ம ரக்சன சமிதி சார்பில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி நடைபெற்றது. 

பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் மதிப்பெண்கள் பெற வேண்டி,  பாரத திருமுருகன்  திருச்சபை, தர்ம ரக்சன சமிதி சார்பில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி நடைபெற்றது. 
குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற வேள்வியை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். பாரத திருமுருகன் திருச்சபை ஆலோசக ர் இல்லங்குடி, தர்ம ரக்சன சமிதி அமைப்பாளர் ஆறுமுகராஜா, திருஅருள் பள்ளி தமிழாசிரியை ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரத திருமுருகன் திருச்சபையின் மாநிலத் தலைவர் ஏ.வி.பி.மோகனசுந் தரம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வேள்வியை நடத்தினார். மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் சாரஸ்வதக்ருதம் என்ற ஆயுர்வேத மருந்து வழங்கப்பட்டது. இதி ல் திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com