திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த கோவையைச் சேர்ந்த பக்தர் இறந்தார்.
கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த கண்ணபிரான் மகன் ராஜகோபாலன் (39). இவர் அங்குள்ள வெல்டிங் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நண்பர்கள் இருவருடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்டநேரமாக வரிசையில் நின்றாராம். அப்போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கோயில் காவல் ஆய்வாளர் பெரி.லட்சுமணன், உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.