தூத்துக்குடியில் நாளை முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் படைப் பணியில் பணிபுரிவோரை சார்ந்தோருக்கான குறைதீர் நாள் கூட்டம் புதன்கிழமை (ஜன.4) நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் படைப் பணியில் பணிபுரிவோரை சார்ந்தோருக்கான குறைதீர் நாள் கூட்டம் புதன்கிழமை (ஜன.4) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் படைப் பணியில் பணிபுரிவோர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிப்பிக் கூடத்தில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர் மற்றும் படைப் பணியில் பணிபுரிவோர்களை சார்ந்தோர் குறைகள் ஏதும் இருந்தால் தங்களது அடையாள அட்டை நகலுடன் தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் (இரட்டை பிரதிகளில்) மாவட்ட ஆட்சியரிடம் நேரில் தாக்கல் செய்து பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com