சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

கோவில்பட்டி இலுப்பையூரணி பார்வதி உயர்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி இலுப்பையூரணி பார்வதி உயர்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
இப்பேரணிக்கு பள்ளித் தலைமையாசிரியை விஜயலட்சுமி தலைமை வகித்தார். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். பேரணியின் போது, மாணவர்கள் சாலைப் பாதுகாப்பு விதிகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர். பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணி, இலுப்பையூரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
பின்னர், பள்ளி வளாகத்தில் விபத்தில்லா தமிழகம் உருவாக, சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க மாணவர், மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்ட சாலைப் பாதுகாப்பு பிரிவுத் தலைவர் முத்துச்செல்வம், பள்ளி மாணவர், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் கருப்பசாமி வரவேற்றார். ஆசிரியர் ஜெயமுருகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com