பூவுடையார்புரத்திலிருந்து பூச்சிக்காடு செல்லும் சாலையை, உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட பூவுடையார்புரத்திலிருந்து பூச்சிக்காடு வரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கான சாலை, சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்துள்ள பகுதியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.