சாலையை சீரமைக்க கோரிக்கை

பூவுடையார்புரத்திலிருந்து பூச்சிக்காடு செல்லும் சாலையை, உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூவுடையார்புரத்திலிருந்து பூச்சிக்காடு செல்லும் சாலையை, உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட பூவுடையார்புரத்திலிருந்து பூச்சிக்காடு வரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கான  சாலை, சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக  சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்துள்ள பகுதியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com