காவல் துறையை கண்டித்து தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் ஏடிஎம் மையம் முன் போராட்டம் நடத்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் மீது போலீஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்தும், காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகரச் செயலர் ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கே.எஸ்.அர்ஜூனன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார்.
ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் முத்து, மாதர் சங்கச் செயலர் பூமயில், நிர்வாகிகள் குமாரவேல், புவிராஜா, பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.