இன்று 8 இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.6) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.6) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் வட்டாட்சியர்கள் தலைமையில் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதன்படி,  தூத்துக்குடி வட்டத்தில் சங்கரப்பேரி கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் கீழவல்லநாடு கிராமத்திலும், திருச்செந்தூர் வட்டத்தில் கடையனோடை கிராமத்திலும், சாத்தான்குளம் வட்டத்தில் படுக்கப்பத்து கிராமத்திலும், கோவில்பட்டி வட்டத்தில் முக்கூட்டுமலை கிராமத்திலும், விளாத்திகுளம் வட்டத்தில் மார்த்தாண்டம்பட்டி கிராமத்திலும், எட்டயபுரம் வட்டத்தில் அயன்கரிசல்குளம் கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் கலப்பைபட்டி கிராமத்திலும் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால்  நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com