தூத்துக்குடியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்தும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் அருள் தலைமை வகித்தார்.  புதுவை மாநில தில்லி பிரதிநிதியான ஜாண்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில், மாநில பொதுச் செயலர்கள் சிரஞ்சீவி, அருள் பெத்தையா, தெற்கு மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com