கயத்தாறு அருகே புதன்கிழமை இரவு பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கயத்தாறு மருத்துவர் காலனி முதல் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் மகேஷ்(17). இவர் ஓட்டி வந்த பைக், கயத்தாறு - பனிக்கர்குளம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதாம். இதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த கயத்தாறு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, எதிரே வந்த பைக்கை ஓட்டி வந்த கயத்தாறு சிதம்பரனார் தெருவைச் சேர்ந்த கொ.கிருஷ்ணசாமியை(47) கைது செய்தனர்.