கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்  கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசைக் கண்டித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்  கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசைக் கண்டித்தும், அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும் பயணியர் விடுதி முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். வழக்குரைஞரணி மாவட்டத் தலைவர் அய்யலுசாமி, கட்சியின் மாவட்ட துணைத் தலைவர்கள் ராமச்சந்திரன், வீரபெருமாள், வட்டாரத் தலைவர்கள் அய்யாத்துரை, உமாசங்கர், செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார், கட்சியின் மாநில பொதுசெயலர்கள் அருள்பெத்தையா, சிரஞ்சீவி, நகரத் தலைவர் சண்முகராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில், கட்சியின் எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவர் மாரிமுத்து, சேவா தள தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொதுச்செயலர் சுப்புராயலு, கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன் உள்பட திரளான காங்கிரஸார் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com