மார்கழி உற்சவத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கல்யாண கிருஷ்ணன் திருக்கோயிலில் இம்மாதம் 9ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை பகவத்கீதை உபன்யாசம் நடைபெறுகிறது.
அங்குள்ள வீரபாகு மஹாலில் நடக்கும் பகவத் கீதை ஐந்தாம் அத்தியாய உபன்யாசத்தை வேளுக்குடி உ.வே.கிருஷ்ணசுவாமி வழங்குகிறார். மேலும் 8ஆம் தேதி கிருஷ்ணன் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று காலை 6 மணி முதல் தொடர்ந்து 24 மணி நேரம் அகண்ட நாம ஜெபம் நடக்கிறது. 9ஆம் தேதி காலை 6.30 மணிக்கு துவாதசி உபன்யாச அன்னதானமும் வழங்கப்படுகிறது. 12ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு திருப்பாவை போட்டிக்கான பரிசுகள் வழங்கப்படுகின்றன. 13ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.