திருச்செந்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (ஜன. 10) வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக சில்லறை வழங்கும் மேளா நடைபெறுகிறது.
இதுகுறித்து, திருச்செந்தூர் பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேளாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்செந்தூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வரும் செவ்வாய்க்கிழமை ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை நாணயங்கள் வழங்கும் மேளா நடைபெறுகிறது. இதில் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்று பயனடையும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.