திருச்செந்தூரில் சாலைப் பாதுகாப்பு வார விழா

திருச்செந்தூர் கோல்டன் ரோட்டரி சங்கம் மற்றும் ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப் சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

திருச்செந்தூர் கோல்டன் ரோட்டரி சங்கம் மற்றும் ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப் சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
திருச்செந்தூர் இந்து தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு கோல்டன் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். கோடீஸ்வரன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் சு. ராஜமாதங்கன், ரோட்டரி பட்டயத் தலைவர் வி.எம். செந்தில்குமார், இணைச் செயலர் டி. முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாலைப் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி பயிற்சியாளர் பாபு மாணவர்களிடையே பேசினார். தொடர்ந்து, போக்குவரத்து மற்றும் சுற்றுலா வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு தாலுகா காவல் ஆய்வாளர் க. ஆடிவேல் கருப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டினார்.
நிகழ்ச்சியில், வட்டார தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் தியாகராஜன், ஆசிரியர்கள் ராஜபெருமாள், ஜார்ஜ்ராஜ், ரோட்டரி சங்க நிர்வாகிகள், அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள், ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக பட்டயத் தலைவர் ரெ. கண்ணன் வரவேற்புரையாற்றினார். ரோட்டரி செயலர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com