சாயர்புரத்தில் 21இல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

சாயர்புரத்தில் ஜன. 21ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

சாயர்புரத்தில் ஜன. 21ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வுத் திட்டம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவற்றின் மூலம்  ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், சாயர்புரம் போப் கலைக் கல்லூரியில் ஜன. 21ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களது நிறுவனத்துக்கு தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முகாமில் கலந்துகொள்ளலாம்.
முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் ஜன. 21ஆம் தேதி காலை 9 மணிக்கு தங்களுடைய சுய விவரங்கள் மற்றும் கல்விச் சான்றிதழுடன் சாயர்புரம் போப் கலைக் கல்லூரியில் தங்கள் பெயர் மற்றும் கல்வி தகுதி விவரங்களை முன்பதிவு செய்து முகாமில் கலந்துகொள்ளலாம்.
மேலும், பணியாளர்கள் தேவைப்படும் தனியார் நிறுவனங்கள் மட்டும் தங்கள் விவரங்களுடன் இணை இயக்குநர் மற்றும் திட்ட அலுவலர், மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியரகம், தூத்துக்குடி எனற முகவரியை நேரில் அணுகலாம்.
மேலும், விவரங்களுக்கு 0461 - 2341282 என்ற தொலைபேசி எண்ணிலும், 94450 34219,  94450 34220, 94450 34221 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com