காயல்பட்டினம், வாவு வஜீஹா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளியல் துறை மன்றக் கூட்டம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் பொருளியல் துறை இணைப் பேராசிரியர் ஏ. அசோக் சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜெ. எல்லோரா சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். கல்லூரி இயக்குநர் டாக்டர் மெர்சி ஹென்றி வாழ்த்தினார். ஏற்பாடுகளை பொருளியல் துறைத் தலைவி எம். சூரத் ஷீபா ஆலோசனையின்பேரில் துறைப் பேராசிரியைகள் செய்திருந்தினர்.