மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அரசு மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தவுடன் தேசிய எக்சிட் தேர்வு முறையை நிராகரிக்க வேண்டும், தேசிய மருத்துவக் குழுவை உருவாக்க முயலும் மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பில், அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற தர்னா போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. குமரன் தலைமை வகித்தார். செயலர் மோசஸ், பொருளாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் அரசு மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.