வாலத்தூர், சாலைபுதூரில் பாரதமாதா பூஜை வழிபாடு

இந்துக்களிடம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் வகையிலும், உலக நன்மை ஏற்படவும், நாட்டில் தீவிரவாதம் ஒழிய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில்

இந்துக்களிடம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் வகையிலும், உலக நன்மை ஏற்படவும், நாட்டில் தீவிரவாதம் ஒழிய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் சாத்தான்குளம் ஒன்றியம் வாலத்தூர், சாலைபுதூரில் பாரத மாதா பூஜை வழிபாடு நடைபெற்றது.
வாலத்தூரில் ஒன்றிய துணைத் தலைவர் ஆனந்த், சாலைபுதூரில் திமுக கிளைச் செயலர் கணபதி ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
சுமதி குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து அனைவரும் ஒன்று திரண்டு நின்று உறுதிமொழி எடுத்தனர். இதில், மாநிலப் பேச்சாளர் மணிவாசகம், மாவட்ட பொதுச்செயலர் பெ.  சக்திவேலன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.எஸ். சுந்தரவேல் ஆகியோர் பேசினர். ஒன்றியச் செயலர் சின்னத்துரை, ஒன்றிய துணைத் தலைவர் கண்ணன், சாலைபுதூர் முத்தாரம்மன் கோயில் தர்மகர்த்தா முத்துராஜ், இந்து முன்னணி பிரமுகர் லிங்கத்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com