சிதம்பராபுரம் ஆர்.சி. பள்ளியில் பொங்கல் விழா

சாத்தான்குளம் அருகேயுள்ள சிதம்ராபுரம் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் வேலாயுதபுரம் ஆர்.சி. துவக்கப்பள்ளி, கந்தன்குடியிருப்பு புனித தோமையார்

சாத்தான்குளம் அருகேயுள்ள சிதம்ராபுரம் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் வேலாயுதபுரம் ஆர்.சி. துவக்கப்பள்ளி, கந்தன்குடியிருப்பு புனித தோமையார் துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகள் இணைந்து பொங்கல் விழாவை வியாழக்கிழமை கொண்டாடின.
விழாவுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் விக்டர் சாலமோன் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் பபிஸ்டன் வரவேற்றார். மாவட்ட காங்கிரஸ் செயலர் து.சங்கர், தொழிலதிபர்கள் பிஜு, பால்பாண்டி, முன்னாள் வர்த்தக சங்கச் செயலர் ராஜேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கும், கல்வி மற்றும் கலைப் போட்டிகளில் சாதித்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிதம்பராபுரம் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எட்விஜ் லிட்டில் மேரி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை வேலாயுதபுரம் துவக்கப்பள்ளி உதவி ஆசிரியர் செல்வராஜ் செய்திருந்தார்.

சாகுபுரம் கமலாவதி பள்ளியில்
ஆறுமுகனேரி, ஜன. 12: சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவு மாணவர், மாணவிகள் பொங்கல் விழா கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஆர்.சண்முகானந்தன் தலைமை வகித்தார். துணை முதல்வர்கள் வெ.செல்வராஜ், வனிதா வி.ராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மழலையர் பிரிவு மாணவர்கள் பாரம்பரிய உடையான பட்டுச் சட்டை, பட்டு வேட்டி, மாணவிகள் பட்டுச் சேலை அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com