தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை:
திருவள்ளுவர் தினத்தை விருப்ப விடுமுறையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.