ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் வியாழக்கிழமை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாட்டை ஏறு தழுவுதல் ஆதரவு கூட்டமைப்பினர் செய்திருந்தனர். பேரணியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என சமூக வலைதளங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
 உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் காவல் துறை சார்பில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, ஜார்ஜ்சாலை சந்திப்பு பகுதியில் வியாழக்கிழமை மாலை திரண்ட ஏராளமான இளைஞர்கள், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com