விவேகானந்தர் பிறந்த நாள் விழா

சுவாமி விவேகானந்தரின் 154ஆவது பிறந்த நாள் விழா கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சுவாமி விவேகானந்தரின் 154ஆவது பிறந்த நாள் விழா கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு பள்ளிச் செயலர் நட்டார் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் முருகன் முன்னிலை வகித்தார். பாஜக ஒன்றியத் தலைவர் ராம்கி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சுவாமி விவேகானந்தர் குறித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர் மாரிச்சாமி, ஆசிரியர்கள், மாணவர், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் விவேகானந்தன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com