திருச்செந்தூரில் மார்கழி உற்சவத்தை முன்னிட்டு பகவத்கீதை உபன்யாசம் நடைபெற்றது.
திருச்செந்தூர் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கல்யாண கிருஷ்ணன் கோயில் மார்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு கடந்த 4 நாள்களாக பகவத் கீதை ஐந்தாம் அத்தியாய உபன்யாசம் நடைபெற்றது. இந்த உபன்யாசத்தை வேளுக்குடி உ.வே.கிருஷ்ண சுவாமிகள் வழங்கினார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.