உடன்குடி பெருமாள்புரத்தில் திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பில் 27 ஆவது ஆண்டு கோலப் போட்டி மற்றும் விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோலமிடும் போட்டி, விளையாட்டு விழாவுடன் தொடர்ந்து மாறுவேடம், சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு பணி நிறைவு மின்வாரிய பொறியாளர் இளையபெருமாள் தலைமை வகித்தார். ஒலிம்பிக் தீபத்தை குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் சுதாகர் ஏற்றி வைத்தார். நற்பணி மன்ற நிர்வாகிகள் பாலன், ஆகாஷ் ஆகியோர் வரவேற்றனர். ஊர்த்தலைவர் வே.ஜெயராமன், துணைத் தலைவர் அலெக்ஸான்டர், ரமேஷ்கோபால், ஊர் நிர்வாகிகள் ரமேஷ்பாபு, முருகேசன், பூபேஷ்குமார், விக்னேஷ்பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு திருச்செந்தூர் பேரவைத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார்.
இதில், உடன்குடி ஒன்றிய திமுக செயலர் பாலசிங், நகரச் செயலர் ஜான்பாஸ்கர், மாவட்ட பிரதிநிதி வசீகரன், பரமன்குறிச்சி ஊராட்சி திமுக செயலர் இளங்கோ, பாரதமாதா சேவா சங்க நிறுவனர் சேர்மலிங்கம் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.