ஸ்ரீவைகுண்டத்தில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலவச வினா- விடை கையேடு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்டத் தலைவர் அக்தர் அய்யூப் ஆலோசனையின் பேரில் ஸ்ரீவைகுண்டத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதன் கிளைத் தலைவர் முஹம்மது அஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணிச் செயலர் அசார் வரவேற்றார். கிளைச் செயலர் ஹமீது அலி, கிளை பொருளாளர் முஹம்மது இம்ரான், கிளை துணைத் தலைவர் ஷேக் மன்சூர், கிளை துணைச் செயலர் முஹம்மது அரபாத், கிளை மாணவரணி பொறுப்பாளர் முஹம்மது பாசித் உள்பட பலர் பேசினர்.
கூட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, எஸ்டிஏ மெட்ரிகுலேஷன் பள்ளி, புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி, அரசு ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படிக்கும் மாணவிகள் பயனடையும் வகையில் 500-க்கும் மேற்பட்ட வினா- விடை தொகுப்பு புத்தகங்கள் வழங்கப்பட்டன.