தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணி

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் கண்ணபிரான் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.  பேரணியில், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர். பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com