தேமுதிக தலைவர் விஜயகாந்த் சனிக்கிழமை (ஜன. 21) காலை தூத்துக்குடியில் தொண்டர்களை சந்திக்கிறார்.
இதுகுறித்து, தெற்கு மாவட்டச் செயலர் எஸ். ஆறுமுகநயினார் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி புதுக்கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெறும் "உங்களுடன் நான்' என்ற நிகழ்ச்சியின் மூலம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து புகைப்படம் எடுக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு விஜயகாந்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.