ஆறுமுகனேரி விநாயகர் கோயில் தெரு அருள்மிகு ஸ்ரீசந்தனமாரி அம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீஉச்சினிமாகாளி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை நடை திறக்கப்பட்டு கும்பபூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து பூர்ணாஹூதி தீபாராதனையும், வருஷாபிஷேக கும்ப அபிஷேகமும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஸ்ரீசந்தனமாரி அம்மன், ஸ்ரீஉச்சினிமாகாளி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை சைவ வேளாளர் சங்கத் தலைவர் ஜெ. சங்கரலிங்கம் உள்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.