சாத்தான்குளம் ராம.கோபாலகிருஷ்ண பிள்ளை அரசுப் பொதுநூலக வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது.
வாசகர் வட்டத்தலைவர் ஓ.சு.நடராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தே.ஜாண் லூயிஸ் வரவேற்றார். இதில் நூலக புரவலர் ரா.குகன்,மாவட்ட நூலகர் மந்திரம், எழுத்தாளர் செ.சுகுமாரன், பேராசிரியர் நாசரேத் காசிராஜன் ஆகியோர் பேசினர். ஓய்வுபெற்ற ஆசிரியர் மகா.பால்துரை, ஓய்வுபெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சாமுவேல்,பாரதி இலக்கிய மன்ற அமைப்பாளர் ஈஸ்வர் சுப்பையா, ஆன்மிக சொற்பொழிவாளர் அனந்தகிருஷ்ணன், கலுங்குவிளை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் அணிஸ் அந்தோணி உள்பட பலர் பங்கேற்றனர். நூலகர் நமச்சிவாயம் நன்றி கூறினார்.