தூத்துக்குடி
காயல்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு வார விழா
காயல்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
காயல்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் இணைந்து நடத்திய இந்நிகழச்சியில், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாத்திமா பர்வீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு சாலை விழிப்புணர்வு குறித்து அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில், அவ்வழியே சென்ற வாகனங்களுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. தமுமுக நகரச் செயலர் ஹஸன், துணைச் செயலர் ஜாஹீர், மனித நேய மக்கள் கட்சி செயலர் ஐதுரூஸ், பொருளாளர் எஸ்.டி. இப்ராகீம், தமுமுக மாவட்டப் பொருளாளர் காதர், மாவட்ட துணைச் செயலர் முஹ்சீன் முர்ஷித், சமூக நீதி மாணவர் இயக்க மாநில துணைச் செயலர் இர்ஷாத், நகரச் செயலர் அப்துல் கரீம், பொருளாளர் நூருல் ஆரீப் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.