தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் ஜனவரி 25 மின்தடை

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சில இடங்களில் புதன்கிழமை (ஜன. 25) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சில இடங்களில் புதன்கிழமை (ஜன. 25) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி நகர மின்வாரிய செயற்பொறியாளர் எம். ரீட்டா மரிய செல்வகுமாரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி அருகேயுள்ள கொம்புக்காரநத்தம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜனவரி 25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், அன்றையதினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வடக்குகாரசேரி, காசிலிங்காபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, கொம்புகாரநத்தம், செக்காரக்குடி, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, எஸ். கைலாசபுரம், மேலதட்டப்பாறை, செட்டியூரணி மற்றும் கே.பி. தளவாய்புரம் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com