தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சில இடங்களில் புதன்கிழமை (ஜன. 25) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி நகர மின்வாரிய செயற்பொறியாளர் எம். ரீட்டா மரிய செல்வகுமாரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி அருகேயுள்ள கொம்புக்காரநத்தம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜனவரி 25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், அன்றையதினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வடக்குகாரசேரி, காசிலிங்காபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, கொம்புகாரநத்தம், செக்காரக்குடி, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, எஸ். கைலாசபுரம், மேலதட்டப்பாறை, செட்டியூரணி மற்றும் கே.பி. தளவாய்புரம் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.