சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த மீனவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் இறந்தார்.
சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை கீழத்தெருவை சேர்ந்தவர் வி.டிவர்ஸ் (52). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மீனவரான இவர், புதன்கிழமை காலையில் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்ல நடந்து சென்றாராம்.
அப்போது அப்பகுதியில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்ததில், அவர்மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.