தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் சாவு

தூத்துக்குடியில் வியாழக்கிழமை, மின்சாரம் பாய்ந்து 6 வயது சிறுவன் உயிரிழந்தான்.

தூத்துக்குடியில் வியாழக்கிழமை, மின்சாரம் பாய்ந்து 6 வயது சிறுவன் உயிரிழந்தான்.
தூத்துக்குடி குறிஞ்சிநகர் 6ஆவது தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் ஆகாஷ் (6). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். வியாழக்கிழமை குடியரசு தின விடுமுறை என்பதால் ஆகாஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, அவர் மின் மோட்டார் அருகே சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட ஆகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்தான். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com