ஓய்வூதியர்கள் வருமான வரி கணக்கீட்டு தாளை தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்கள், தங்களது வருமானவரி கணக்கீட்டுத் தாளை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்கள், தங்களது வருமானவரி கணக்கீட்டுத் தாளை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கருவூல அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களில் வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 192இன் கீழ் 2016-17ஆம் நிதியாண்டில் குறிப்பிட்ட விலக்கு எல்லையை விட அதிக வருமானம் உடைய ஓய்வூதியதாரர்கள் பலர் உள்ளனர். அவர்கள் வருமானவரிச் சட்டத்தின்படி தகுதியுள்ள முதலீடுகள் மற்றும் கழித்தலுக்குரிய சான்றுகளை நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) அட்டை நகலுடன் வருமானவரி அறிக்கை படிவத்துடன் பிப். 10ஆம் தேதிக்குள் கருவூலத்தில் அளிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com