நாலாட்டின்புத்தூர், கழுகுமலையில் சிறப்பு மருத்துவ முகாம்

கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்குள்பட்ட நாலாட்டின்புத்தூர் மற்றும் கழுகுமலையில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்குள்பட்ட நாலாட்டின்புத்தூர் மற்றும் கழுகுமலையில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாலாட்டின்புத்தூர் கே.ஆர். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி முகாமைத் தொடங்கிவைத்தார்.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா திட்ட விளக்கவுரையாற்றினார். முகாமில், நாலாட்டின்புத்தூர், வானரமுட்டி, முடுக்குமீண்டான்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
முகாமில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு,மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டன. கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தொடங்கிவைத்தார். இதில் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
முகாம்களில், தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செளந்திரநாயகி, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேவகப்பாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர்கள் ரெஜினாமேரி, அமித்கண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com