தூத்துக்குடி மாவட்ட தமாகா இளைஞரணித் தலைவராக அ.கனி நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி முத்துநகரைச் சேரந்த அ.கனி, தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக, மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அ.கனியை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா தலைவர் கதிர்வேல், கோவில்பட்டி நகர பொறுப்பாளர் ராஜகோபால் ஆகியோர் வாழ்த்தினர்.