கழுகுமலையில் முன்விரோதம் காரணமாக மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கழுகுமலை திருப்பதிராஜா தெருவைச் சேர்ந்த சண்முகவேல் மகன் குருசாமி (33). பூ கடை நடத்தி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல தனது மோட்டார் சைக்கிளை வீட்டு எதிர்புறம் உள்ள புது அம்மன் கோயில் அருகே நிறுத்தியிருந்தாராம். இந்நிலையில், திங்கள்கிழமை காலை பார்த்தபோது மோட்டார் சைக்கிள் தீயில் கருகிய நிலையில் இருந்ததாம். இது குறித்து குருசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபரை தேடி வந்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது விநாயகர் காலனியை சேர்ந்த சூடாமணி மகன் ஆட்டோ ஓட்டுநர் குருநாதன் (35) என்பதும், முன்விரோதம் காரணமாக தீ வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.