திருச்செந்தூர் ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப்பள்ளி மாணவி தேசியத் திறனாய்வுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட 2016-2017 கல்வி ஆண்டுக்கான தேசிய திறானாய்வுத் தேர்வில் இப்பள்ளி மாணவி ந.சரஸ்வதி தேர்வு பெற்றுள்ளார்.
இம் மாணவியை பள்ளிச் செயலர் ச.ராமச்சந்திரன், தலைமையாசிரியை ச.உஷா, ஆசிரியைகள் ந.குணசுந்தரி, க.சாந்தி, வீ.விஜயா உள்ளிட்ட பலர் பாராட்டினர்.