"வக்பு வாரிய தேர்தலில் பணிபுரிய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்'

தமிழ்நாடு வக்பு வாரிய தேர்தலில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வக்பு வாரிய தேர்தலில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மூலமாக நடத்தப்படும் தேர்தலில் பணிபுரிய பொதுத் தேர்தல்கள், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்துவதில் அனுபவம் வாய்ந்த வருவாய், கூட்டுறவு, நகராட்சி, ஊரக வளர்ச்சித் துறைகளில் பணியாற்றி ஒய்வு பெற்ற முஸ்லிம் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதேபோல, பள்ளிவாசல்கள் மற்றும் இதர வக்புகளுக்கு முத்தவல்லிகளுக்கு, நிர்வாகக் குழு தேர்வு செய்வதற்கு, தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய மாவட்ட அளவிலான தேர்தல் பார்வையாளர்கள் குழுக்கான பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு தேர்தலுக்கும் தகுந்த மதிப்பீட்டுத் தொகையானது வழங்கப்படும்.
விண்ணப்பங்கள், முழு விவரங்களுடன் மே 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு வக்பு வாரியம், எண்:1,  ஜாபர் சிராங் தெரு, சீதக்காதி நகர், சென்னை - 600 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com