திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (மே 29) தூத்துக்குடியில் நடைபெறுகிறது.
இது குறித்து கோயில் இணை ஆணையர் தா.வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ன்ற ஜூன் 7ஆம் தேதியன்று வைகாசி விசாகத் திருவிழா தொடங்கி நடைபெறுகிறது. திருவிழாவுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
திங்கள்கிழமை (மே 29) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில், அவரது அலுவலகத்தில் உள்ள சிப்பி கூடத்தில் நடைபெறுகிறது.
இக் கூட்டத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றுத் தேவையான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைகளை வழங்கலாம் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.