சாத்தான்குளம் மகளிர் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

சாத்தான்குளம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் டெங்கு காய்ச்சல்

சாத்தான்குளம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு கல்லூரி முதல்வர் இரா. சாந்தகுமாரி தலைமை வகித்தார். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் புஷ்பராணி வரவேற்றார். இளைஞர் செஞ்சிலுவைச் சங்க அலுவலர் சண்முகசுந்தரி நிகழ்ச்சி தொகுத்து வழங்கி பேசினார்.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் ஐலிலின்சுமதி, சாத்தான்குளம் ஒன்றிய ஆணையர் நாகராஜன், அரசு சித்தா மருத்துவர் வைகுண்டரமணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ் செல்வத்துரை ஆகியோர் டெங்கு குறித்து பேசினர். தொடர்ந்து மாணவிகள் சுகாதார உறுதிமொழி எடுத்தனர். பின்னர், டெங்கு கொசு உற்பத்தியாகும் காரணிகள் குறித்த கண்காட்சியை மாணவிகள், பேராசிரியர்கள் பார்வையிட்டனர். அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் விளக்கம் அளித்தனர். பின்னர் மாணவிகள், பேராசிரியர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர் செல்வதாஸ், ஜெயபால் உள்ளிட்ட பேராசிரியை, மாணவிகள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஏஞ்சலிலின் நான்சி சோபியா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com