எரிவாயு நுகர்வோர் பாதுகாப்பு கருத்தரங்கு

எட்டயபுரம் அருகே சின்னமலைகுன்று கிராமத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

எட்டயபுரம் அருகே சின்னமலைகுன்று கிராமத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
திருப்பதி கேஸ் நிறுவன உரிமையாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஊராட்சி முன்னாள் தலைவர் சோலைச்சாமி முன்னிலை வகித்தார். இந்தியன் ஆயில் நிறுவன விற்பனை மேலாளர் நரேஷ் எரிவாயுவை பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்தும் முறைகள் குறித்து பேசினார். பின்னர் நுகர்வோர் மேம்பாடு, பாதுகாப்பு நலன் குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பிடம் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி,  சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com