ஆத்தூர் அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலிலில், ஐப்பசி திருக்கல்யாண உற்சவ விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கோயில் செயல் அலுவலர் அஜீத் (பொ) தலைமை வகித்தார். ஐப்பசி திருக்கல்யாண உற்சவம் மற்றும் கந்த சஷ்டி விழாவில், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகள் எளிமையாக நடத்துவது; விரைவில் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில், திரளானோர் கலந்துகொண்டனர்.