நல்லான்விளையில் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பு திருவிழா

நாசரேத்  அருகே உள்ள நல்லான்விளையில்  அய்யா வைகுண்டர் பதியில் அகிலத்திரட்டு திரு ஏடுவாசிப்பு  திருவிழா  10 நாள்கள் நடைபெற்றது.

நாசரேத்  அருகே உள்ள நல்லான்விளையில்  அய்யா வைகுண்டர் பதியில் அகிலத்திரட்டு திரு ஏடுவாசிப்பு  திருவிழா  10 நாள்கள் நடைபெற்றது.
திருவிழாநாள்களில் தினமும் காலையில்  உகப் படிப்பு,   உச்சிப்படிப்பு,  அன்னதர்மம், மாலையில்  உகப்படிப்பு,  திரு ஏடுவாசிப்பு,   அன்னதர்மம்  ஆகியன நடைபெற்றன. 8 ஆம் திருநாளில்  திரு ஏடு வாசிப்பு நிகழ்ச்சி மற்றும்  திருக்கல்யாண வாசிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.  தொடர்ந்து  அய்யாவுக்கு சுருள் தாம்பலம் நேமிப்பவர்கள் பழவகைகள்,  இனிப்பு வகைகள் கொண்டுவந்து கோயிலை சுற்றிவரும் நிகழ்ச்சியும் ,   அருள்வாக்கு அளித்தலும்  நடைபெற்றது.  நிறைவுநாளான ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு  உகப்படிப்பு,  பகல் 12 மணிக்கு  உச்சிப்படிப்பு, மாலை 6:30 மணிக்கு திரு ஏடு வாசிப்பு மற்றும்  பட்டாபிஷேகம் ஆகியன நடைபெற்றன.
 ஏற்பாடுகளை அய்யாவின் அருளாளர்  ஐ. ஐயன்சாமி தலைமையில், அய்யாவின்அன்புக் கொடிமக்கள்  செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com