நாசரேத் அருகே உள்ள நல்லான்விளையில் அய்யா வைகுண்டர் பதியில் அகிலத்திரட்டு திரு ஏடுவாசிப்பு திருவிழா 10 நாள்கள் நடைபெற்றது.
திருவிழாநாள்களில் தினமும் காலையில் உகப் படிப்பு, உச்சிப்படிப்பு, அன்னதர்மம், மாலையில் உகப்படிப்பு, திரு ஏடுவாசிப்பு, அன்னதர்மம் ஆகியன நடைபெற்றன. 8 ஆம் திருநாளில் திரு ஏடு வாசிப்பு நிகழ்ச்சி மற்றும் திருக்கல்யாண வாசிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து அய்யாவுக்கு சுருள் தாம்பலம் நேமிப்பவர்கள் பழவகைகள், இனிப்பு வகைகள் கொண்டுவந்து கோயிலை சுற்றிவரும் நிகழ்ச்சியும் , அருள்வாக்கு அளித்தலும் நடைபெற்றது. நிறைவுநாளான ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 6:30 மணிக்கு திரு ஏடு வாசிப்பு மற்றும் பட்டாபிஷேகம் ஆகியன நடைபெற்றன.
ஏற்பாடுகளை அய்யாவின் அருளாளர் ஐ. ஐயன்சாமி தலைமையில், அய்யாவின்அன்புக் கொடிமக்கள் செய்திருந்தனர்.