காணாமல் போன கட்டட தொழிலாளி சடலமாக மீட்பு

கோவில்பட்டி அருகே காணாமல் போன கட்டடத் தொழிலாளியை சடலமாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை  மீட்டனர். 

கோவில்பட்டி அருகே காணாமல் போன கட்டடத் தொழிலாளியை சடலமாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை  மீட்டனர். 
எட்டயபுரம் வட்டம், கீழஈராலையடுத்த நக்கலக்கோட்டையைச் சேர்ந்தவர் ஆண்டி மகன் சுப்புராஜ் (53). கட்டடத் தொழிலாளியான இவர், மனைவி விஜயலட்சுமியிடம் 13ஆம் தேதி மது அருந்துவதற்காக பணம் கேட்டாராம். அவர் தர மறுத்ததையடுத்து விஜயலட்சுமியிடம் தகராறு செய்துவிட்டு கொப்பம்பட்டி காவல் நிலையத்திற்கு உள்பட்ட கீழப்புதூருக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். 
ஆனால் ஊருக்குச் சென்ற அவர், வீடு திரும்பவில்லையாம். அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லையாம். இதையடுத்து, விஜயலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் சுப்புராஜை தேடி வந்தனர். 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை கீழப்புதூர் ஊருக்கு மேற்கே உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள உடைமரத்தில் சடலம் ஒன்று தொங்குவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். 
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர், காணாமல் போன ஆண்டி மகன் சுப்புராஜ் என்பது தெரியவந்தது.  இதுகுறித்து கொப்பம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com