சோழாபுரம் இந்துநாடார் காமராஜ் உயர்நிலைப் பள்ளியில் திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் ஒப்பித்தல், எழுதுதல், விநாடி- வினா போட்டிகள் நடைபெற்றது.
பள்ளிச் செயலர் பரமசிவன் தலைமை வகித்தார். இணைச் செயலர் தேன்மணி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பொன்னுநடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியர் பத்திரகாளி வரவேற்புரையாற்றினார். திருக்குறள் ஒப்பித்தல், எழுதுதல், விநாடி- வினா போட்டிகளில் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தாய்மொழி வழிக் கல்வியின் அவசியம் குறித்தும், திருக்குறளின் மேன்மை குறித்தும், திருக்குறள் பேரவைச் செயலர் வைதேகி சிறப்புரையாற்றினார். போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.