காயல்பட்டினத்தில் கஞ்சா வைத்திருந்ததாக 5 பேர் கைது

காயல்பட்டினம் கடற்கரைப் பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக 5 பேரை ஆறுமுகனேரி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.


காயல்பட்டினம் கடற்கரைப் பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக 5 பேரை ஆறுமுகனேரி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஆறுமுகனேரி போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காயல்பட்டினம் கடற்கரைப் பகுதியில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது போலீஸார் வருவதைக் கண்ட சிலர் அங்கிருந்து தப்பி ஓடினர்.
போலீஸார் அவர்களை விரட்டிப் பிடித்து சோதனையிட்டபோது, அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்ததும், அவர்கள் காயல்பட்டினம் மாட்டுகுளம் முகம்மது புகாரி (24), கீழநைனா தெரு ஷேக்முகம்மது (34), சீதக்காதிநகர் ஷேக்முகம்மது (35), சீதக்காதிநகர் ஜின்னா (65), சதாம்உசேன் (23) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com