தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சில இடங்களில் வியாழக்கிழமை (ஆக.16) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் செ. விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தூத்துக்குடி அருகேயுள்ள அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஆக .16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. அன்றையதினம் மாப்பிள்ளையூரணி, அய்யனார்புரம், திரேஸ்புரம், தாளமுத்துநகர், டேவிஸ்புரம், தருவைகுளம், சிலுவைப்பட்டி, அழகாபுரி, ராசபாளையம், பட்டினமருதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.