ஆத்தூர் சி.சண்முகசுந்தர நாடார் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஆத்தூர் காவல் ஆய்வாளர் மீனா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 337 மாணவர், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிர்வாக அலுவலர் கந்தசாமி, தலைமை ஆசிரியர் ரஞ்சித்சிங் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.